கொரோனாவால் சிறைக்கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டம்



இலங்கையில் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அங்குள்ள கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறைகளிலுள்ள பிணை வழங்கக் கூடியதான கைதிகளுக்குப் பிணை வழங்குமாறும், சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.