திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டில் இளம் ஜோடிகள் நீரில் மூழ்கி மரணம்!

மைசூர்: திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது அவர்கள் அமர்ந்திருந்த,வள்ளம் கவிழ்ந்ததில் காவிரி ஆற்றில் ஒரு இளம் ஜோடிகள் நீரில் மூழ்கி இறந்தனர்.

இறந்தவர்கள் மைசூருவில் உள்ள கியதமரனஹள்ளியைச் சேர்ந்த சசிகலா (20), ம்ற்றும் சந்திரு (30) கடந்த வாரம் நிச்சயதார்த்தம் செய்து இருந்தனர், அவர்களது திருமணம் நவம்பர் 22 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் இரண்டு உறவினர்களுடன் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டுக்காக முடுகுதோருக்குச் சென்றிருந்த வேளையில் திங்கள்கிழமை (நவம்பர் 9) முடுகுத்தூர் காவிரி நதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது, மூழ்கி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.