தேர்தல் கால பொய்கள் இன்று நிஜமாகின்றன! சி.ஐ.டி. விசாரணையின் பின்னர் அரசு மீது பிரசன்ன கடும் தாக்கு.
“தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் கூறியது பொய் என்பதை நாட்டு மக்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் நேற்று விசாரணைக்கு வந்திருந்தார்.
விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கெஹெல்பத்தர பத்மே (பாதாளக் குழு உறுப்பினர்) என்பவர் எமது ஊரைச் சேர்ந்தவர்.
அரசியல் ரீதியில் அவர் எம்முடன் இணைந்து செயற்பட்டாரா என்பது பற்றி விசாரிக்கவே சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
கெஹெல்பத்தர பத்மேவுடன் எனக்குத் தொடர்பு இல்லை. அவருடைய தந்தையுடன் எமக்குத் தொடர்பு இருக்கின்றது.
தமது இயலாமையை மூடிமறைப்பதற்காகவே இந்த அரசு எம்மை விசாரணைக்கு அழைக்கின்றது.
இந்த அரசு கூறியது பொய் என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இதனால் அரசு மீது அதிருப்தி உருவாகியுள்ளது.” – என்றார்.
