வலயக் கல்வி அலுவலகத்தில் இலஞ்சம்: அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய இரு அதிகாரிகள் – அம்பாறையில் பரபரப்பு.
அம்பாறை, தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஆகியோர் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகார்தாரர் சேவையை விட்டு வெளியேறிய பிறகு, அவரை மீண்டும் பணியில் சேர்த்து, கல்வி அமைச்சின் மூலம் தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில் அவரது இணைப்பை நீட்டிக்க, சந்தேகநபர்கள் 50 ஆயிரம் ரூபா இலஞ்சம் கேட்டுள்ளனர்.
தெஹியத்தகண்டிய வலயக் கல்வி அலுவலகத்தில், இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று பிற்பகல் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெஹியத்தகண்டிய நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.
