பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கொழும்பு, என்.எம். பெரேரா நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் அன்னாரது பூதவுடலுக்கு, நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது, பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்த ஜனாதிபதி, தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் நேரில் தெரிவித்துக் கொண்டார்.
