வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப மரணம்!

யாழ். சுன்னாகம் பகுதியில் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் ஒருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் – ஊரெழு பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் ஜெயச்சந்திரன் (வயது 57) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்க முற்பட்டபோது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த அவரை, நள்ளிரவு 12 மணியளவில் உறவினர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.