பவித்ராவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை.

பவித்ராவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பிரேரணையில் சில எம்.பிக்கள் இன்று கையொப்பமிட்ட நிலையில் ஏனையோர் நாளை கையொப்பமிடுவார்கள் எனவும் தெரியவருகின்றது.

கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமை, மக்கள் மத்தியில் தவறான தகவல்களை வெளியிட்டமை உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக்கொண்டே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.