பாதாள உலகக் குழுத் தலைவர் ‘பட்டுவத்த சாமர’வின் மனைவியின் வீட்டுக்கு அதிகாலை துப்பாக்கிச்சூடு! – ஜா-எல பகுதியில் பரபரப்பு.

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘பட்டுவத்த சாமர’ என்பவரின் மனைவிக்குச் சொந்தமான வீட்டுக்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஜா – எல, புனித அன்னாள் வீதியில் அமைந்துள்ள இந்த வீட்டுக்கு இன்று அதிகாலை 1.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலுக்கு ரி – 56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வீடு தற்போது வேறொரு தரப்பினருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது என்று பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

சம்பவம் தொடர்பில் ஜா – எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.