போதைப்பொருளுடன் மாநகர சபை ஊழியர் கட்டுநாயக்கவில் அதிரடி கைது!
சுமார் 11 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” மற்றும் “ஹஷீஷ்” போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கைப் பயணி ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மாநகர சபை ஊழியர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தனது பயணப் பொதியில் இரகசியமாக 6 கிலோ 590 கிராம் “குஷ்” போதைப்பொருளையும், 4 கிலோ 910 கிராம் “ஹஷீஷ்” போதைப்பொருளையும் மறைத்து வைத்து கடத்தி வர முற்பட்டுள்ளார்.
விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போதே, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
