ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கிய நிலையில் மயக்கமடைந்த சிறுமி மரணம்.

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கிய நிலையில் மயக்கமடைந்த சிறுமி
யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கோயில் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த உயிந்தன் சாதுரியா (வயது-7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

யாழ். பொஸ்கோ வித்தியாலத்தில் கல்வி கற்று வந்த மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர். இதுகுறித்து தெரியவருவதாவது,

கடந்த 3ம் திகதி இந்தச் சிறுமி ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் கொழுவியிருந்த ஊஞ்சல் கயிற்றைக் கதிரையில் ஏறி எடுக்க முற்பட்டுள்ளார்.

ஊஞ்சல் கயிற்றில் போட்டிருந்த முடிச்சை அவிழ்க்க முற்பட்ட போது கயிறு கழுத்தில் சிக்குண்டுள்ளது. சிறுமி ஏறி நின்ற கதிரையும் விழுந்துள்ளது. இதனால் சிறுமி நிலைகுலைந்து வீழ்ந்ததால் கயிறு கழுத்தை இறுக்கியுள்ளது.

வெளியில் வந்த தாயார் மகள் கயிற்றில் தூங்கிக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளார். உடனடியாக பிள்ளையை மீட்டுச் சென்று யாழ். போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி நேற்று உயிரிழந்தார்

மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.