களுத்துறை சிறைக் கைதிகள் கூரை மீது ஏறிப் போராட்டம்!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 20 கைதிகள் சிறைக் கூரை மீது ஏறி நின்று போராட்டம் செய்து வருகின்றனர்.

இன்று மாலை முதல் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்கள். தங்களது வழக்கு விசாரணைகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பகுப்பாய்வு அறிக்கைகளை விரைந்து சமர்பிக்கும்படி வலியுறுத்தியே இவர்கள் இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர் என்று களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்த்தனர்.

Leave A Reply

Your email address will not be published.