‘எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்’ – யாழில் விழிப்புணர்வுச் செயற் திட்டம்

‘எம்மவர் உயிர்களை
நாமே பாதுகாப்போம்’
– யாழில் விழிப்புணர்வுச் செயற் திட்டம்

‘எம்மவர் உயிர்களை நாமே பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இன்று கொரோனா விழிப்புணர்வுச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமியின் அனுசரணையுடன், கனடா தென்மராட்சி  சேவை நிறுவனத்தால் குறித்த விழிப்புணர்வுச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் இன்று காலை 10 மணிக்கு தொன்மராட்சி – சாவகச்சேரியில் ஆரம்பமான விழிப்புணர்வுச்  செயற்றிட்டத்தின்போது இலவச முகக்கவசங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உட்படப் பலர் இதில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.