மோடியின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைத்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தட்டுப்பாடு சூழலை கருத்தில் கொண்டு இந்திய பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைந்துள்ளார்.
ANI மற்றும் PTI இது தொடர்பான தகவலை தெரிவித்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக குஜராத் மற்றும் அசாம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டு இருப்பது அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் மூலமும் தெரியவந்துள்ளது.
வாகனங்களின் எண்ணிக்கையை குறித்த தோடு சாத்தியமான இடங்களில் தனது பாதுகாப்பு வாகன அணியில் மின்சார வாகனங்களை இணைக்குமாறும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும் புதிய மின்சார வாகனங்களை வாங்குவதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை சேமிக்க கார்பூலிங்(carpooling) முறையை பின்பற்றுதல் ஆகியவற்றையும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அதைப்போல உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், டெல்லி முதல்வர் ரேகா குப்தாவும் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.
