மீன்களை திருடிய மூவருக்கு தலா 20ஆயிரம்  தண்டம்.

குளத்திலிட்ட வலையில் மீன்களை திருடிய மூவருக்கு தலா 20ஆயிரம்  தண்டம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை மதவாளசிங்கன் குளத்தில் இடப்பட்ட வலைகளில் மீன்கள் குறைவாக காணப்படுவதை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது இரவு நேரங்களில் வலைகளில் இருந்து மீன்களை திருடிய மூவரை மடக்கிப்பிடித்த மீனவர்கள் கிராம நன்னீர் மீன்பிடி சங்கம் ஊடக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த மூவரையும் நேற்று(17) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து தலா 20 ஆயிரம் ரூபா தண்டமாக விதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.