எல்நினோ எச்சரிக்கை: பெங்களூருவில் குடிநீர் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!

பெங்களூரு,

எல்நினோவால் பருவமழை குறைவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இதன்படி வாகனங்கள் கழுவ குடிநீரை பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் குடிநீரை பயன்படுத்தி வீட்டு தோட்டங்கள், சாலைகள், நடைப்பாதைகளை சுத்தம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கட்டுமான பணிகளுக்கும் குடிநீரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.