போகம்பறை சிறையால் கண்டிக்குப் பேராபத்து! சபையில் கிரியெல்ல சுட்டிக்காட்டு.

போகம்பறை சிறையால்
கண்டிக்குப் பேராபத்து!
சபையில் கிரியெல்ல சுட்டிக்காட்டு

“பழைய போகம்பறை சிறைச்சாலை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதால் கண்டி நகருக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது.”

– இவ்வாறு எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்‌ஸ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“பழைய போகம்பறை சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியிலேயே கண்டி பொதுச்சந்தை, ரயில் நிலையம், பஸ் தரிப்பிடம் ஆகியன அமைந்துள்ளன. சிறைச்சாலையில் வேலை செய்யும் சுமார் 50 அதிகாரிகள் நாளாந்தம் நகர்ப் பகுதிக்கு வந்து செல்கின்றனர். கைதிகள்கூட தப்பியோட முயற்சித்துள்ளனர்.

குறித்த சிறைச்சாலை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 100 பேரே கொண்டுவரப்படுவார்கள் எனக் கூறப்பட்டாலும் அந்த எண்ணிக்கை 800 பேர் வரை அதிகரித்துள்ளது. இதனால் கண்டி நகரம் ஆபத்தில் இருக்கின்றது. எந்நேரத்திலும் கொரோணா கொத்தணியொன்று உருவாகலாம். எனவே, குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தை கண்டி நகரில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.