சிறையிலிருந்து தப்ப முயன்று மரணமடைந்தவர்களுக்கு கொரோனா தொற்று.

போகம்பறை சிறையிலிருந்து தப்ப முயன்று மரணமடைந்தவர் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா தொற்று.

போகம்பறை பழைய சிறைச்சாலையிலிருந்து நேற்றைய தினம்  தப்பிக்க முயன்ற இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மரணமடைந்த கைதிக்கும், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை, PCR பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சிறையிலிருந்து தப்பி வெளியில் ஓடி, மத்திய மாகாண கல்வித் திணைக்கள வளாகத்தில் பதுங்கியிருந்து நிலையில் கைது செய்யப்பட்ட கைதிக்கு, PCR பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவரது அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என்றும், கண்டிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.