வரலாற்றுச் சாதனை: இந்தியாவில் முதன்முறையாக தனியார் தயாரிப்பான ‘விக்ரம்-1’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தியாவில் முதன்முறையாக தனியார் நிறுவனம் தயாரித்த ‘விக்ரம்-1’ ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இன்று நண்பகல் 12.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
முன்னதாக, 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டத் திட்டமிடப்பட்டு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணில் செலுத்தப்படுவது 12.05 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்த ராக்கெட்டை உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளது.
