குடும்பஸ்தர் ஒருவர் குத்திப் படுகொலை!
கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மதுபோதையில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மோதலாக மாறிய நிலையிலேயே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
