சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தப்படல்.

போகம்பரை சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தலில்!

போகம்பரை சிறைச்சாலை அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
போகம்பரை சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பிச் செல்ல முயன்றபோது அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது உயிரிழந்த கைதி ஒருவர் மற்றும் கடும் காயங்களுக்குள்ளான கைதி ஒருவர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு அதிகாரிகளையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த இரு கைதிகள் தொடர்பில் செயற்பட்ட வைத்தியர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் ஈன தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தரப்பினர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட்டமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.