முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட / நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதி இன்று(20) வெள்ளிக்கிழமை மதியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீதிமன்ற அலுவலகங்களுக்கு அவசியமான கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளுக்கு 570 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

இவ் நீதிமன்றமானது நீதவான் நீதிமன்ற அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், பதிவு அலுவலகம், சட்டத்தரணிகள் அலுவலகம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.