மாவீரர்களை நினைவேந்த முல்லைத்தீவிலும் தடை!

மாவீரர்களை நினைவேந்த முல்லைத்தீவிலும் தடை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை விதித்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, மாங்குளம், மல்லாவி ஆகிய 5 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் இந்தத் தடை உத்தரவுகளைப் பெற்றனர்.

இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் எங்குமே மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்வதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.