அதிகாரிகளுக்கு பாடம் சொன்ன 20 வயது இளைஞர்: தனியாளாக அஜ்நார் நதியைச் சுத்தப்படுத்தி சாதனை!

மத்திய பிரதேசம்,

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், ராஜ்கர் மாவட்டத்தில் கடுமையாக மாசுபட்டுள்ள அஜ்நார் நதியை தனது சொந்த கைகளாலும், சொந்தப் பணத்தாலும் சுத்தப்படுத்தி வருகிறார்.

தனி ஆளாக நதியை சுத்தப்படுத்தும் இளைஞர்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பீட்டு தபாஹி. இவர் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள கடுமையாக மாசுபட்டுள்ள அஜ்நார் நதியை தனது சொந்த கைகளாலும், சொந்தப் பணத்தாலும் சுத்தப்படுத்தி வரும் செயல் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

நகராட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்
நதியை சுத்தப்படுத்த அதிகாரிகள் எப்போது வருவார்கள் என்று காத்திராமல், மாதக்கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை தனி ஆளாக அவர் அகற்றி வருவதற்கு பாராட்டுகள் குவிந்தாலும், நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபமும் எழுந்துள்ளது. “இது நமது நகராட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்” என்று சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.