தேசியப்பட்டியல் ஆசனம் யாருக்கு? : நாளை இறுதி முடிவு என்கிறது ஐ.தே.க

தேசியப்பட்டியல்
ஆசனம் யாருக்கு?

நாளை இறுதி முடிவு என்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரைத் தெரிவு செய்வது குறித்து நாளை திங்கட்கிழமை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கட்சியின் பிரதித் தலைவராக  ருவான் விஜேவர்தன செயற்பட்டு வரும் நிலையில், கட்சித்  தலைமைத்துவத்துக்கு அவர் தெரிவு செய்யப்படுவதில் எந்த எதிர்ப்பும் இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.