சிறைக் கொத்தணி 652 ஆக அதிகரிப்பு. இன்றும் 35 பேருக்குத் தொற்று உறுதி.

சிறைக் கொத்தணி 652 ஆக அதிகரிப்பு.
இன்றும் 35 பேருக்குத் தொற்று உறுதி

சிறைச்சாலைகளில் இன்றும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக இன்று கைதிகள் 31 பேருக்கும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 4 பேருக்கும் என 35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சிறைச்சாலைக் கொத்தணியில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 652 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் கைதிகள் 609 பேரும், சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்கள் 42 பேரும் உள்ளடங்குகின்றனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.