வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைஞர் படகுடன் தமிழகத்தில் கரையொதுங்கினார்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைஞர் படகுடன் தமிழகத்தில் கரையொதுங்கினார்.

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளார்.

40 கோஸ்பவர் இயந்திரம் பொருத்தப்பட்ட குறித்த படகைத் தமிழகக் கரையோரக் காவல்படையினர் கண்ணுற்று விசாரித்தபோது மீன்பிடிக்க வந்தபோது திசைமாறி தமிழகப் பகுதிக்குள் வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் வல்வெட்டித்துறை, ஆதிகோயிலடி பகுதியைச் சேர்ந்த விஜயமூர்த்தி கலைச்செல்வன் (வயது 29) என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த இளைஞரைக் காணவில்லை என்று வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தாரால் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.