யாழில் பதற்றம் தென்னிலங்கையில் இருந்த வந்தவர்  உணவகத்தில் சடலமாக மீட்பு!

யாழில் பதற்றம் தென்னிலங்கையில் இருந்த வந்தவர்  உணவகத்தில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உணவகமொன்றிலிருந்து இன்று காலை ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து குறித்த உணவகத்தில் கடமையாற்றும், பணியாளர்கள் வெளியேறுவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பொலிஸாரின் தீவிர கண்காணிப்புக்குள் உணவகம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் எனக் கூறப்படுகின்றது.

குறித்த நபர் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்தவர் என்ற அடிப்படையில், மாதிரிகள் எடுக்கப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.