ஐ.நா. தீர்மானத்தை வலுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்கும் சுவிஸ்.

ஐ.நா. தீர்மானத்தை வலுப்படுத்த
முழு ஒத்துழைப்பு வழங்கும் சுவிஸ்.

சுமந்திரன் எம்.பிடம் அந்நாட்டுப் புதிய தூதுவர் உறுதி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து புதிய தூதுவர் டொமினிக் ஃபர்க்லரை இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

தூதுவருடன் ஐ.நா. தீர்மானம், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை வலுப்படுத்த சுவிட்சர்லாந்து முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று இதன்போது தூதுவர் வாக்குறுதியளித்தார் என்றும் சுமந்திரன் எம்.பி. மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.