விற்பனை நிலையங்களுக்கு வருபவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை.

விற்பனை நிலையங்களுக்கு வருபவர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முகமாக புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் இன்று(25) விற்பனை நிலையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை பதிவு செய்யுமாறு ஒலி பெருக்கி ஊடக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அவ் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தங்கள் விற்பனை நிலையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் முழுவிபரங்கள் அதாவது பெயர், விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை ஒவ்வொரு நாளும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

மற்றும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தங்கள் பங்களிப்புக்கு நன்றி என்றவாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.