கற்குவாரிப்பகுதியில் இன்று காலை வெடிப்பு சம்பவம் மக்கள் அனைவரையும் அச்சத்தில்…

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (26.11.2020) காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பகுதியில் காவல்துறையினர் மற்றும்இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்.

மாங்குளம் கற்குவாரிப்பகுதியில் இன்று காலை வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .இது பிரதேசத்தில் உள்ள அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்னிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ,மற்றும் படையினர் வெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளார்கள்.

கற்குவாரிப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது இதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்களிடம் காவல்துறையினர் விசாரணையினை மேற்கொண்டுள்ளார்கள்.
முதற்கட்ட விசாரணையின் போது கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த கைக்குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தடையவியல் வரவைளக்கப்பட்டு தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளார்கள்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான படையினர் காவல்துறையினர் புலனாய்வாளர்கள் நிறுத்தபட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை பிரதேச மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.