சட்டவிரோத லீசிங், நிதி நிறுவனங்கள் தொடர்பாக பொது மக்கள் முறையிடலாம்

நிதி வர்த்தகம் மற்றும் நிதி குத்தகை (லீசிங்) வர்த்தகம் ஆகியவற்றில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொது மக்களின் முறைப்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் தலைமையிலான குழு அறிவித்துள்ளது.

நிதி வர்த்தகம் மற்றும் நிதி குத்தகை வர்த்தகம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்மொழிய நியமிக்கப்பட்ட குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. குறித்த குழு நேற்று மத்திய வங்கியின் ஆளுநர் தலைமையில் இரண்டாவது தடவையாக கூடியது.

இதன்போதே பொது மக்களின் ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நிதி வர்த்தகம் மற்றும் நிதி குத்தகை வணிகம் குறித்து பொது மக்களின் கருத்துகளையும் சிவில் அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கருத்துகளையும், முறைப்பாடுகளையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.