திருப்திப்படுத்த முடியாததால் காதலரை கழட்டி விட்ட பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் படங்களில் சேர்ந்து ஜோடியாக நடிப்பவர்கள் காதலிப்பதும் பின்னர் பிரேக்கப் செய்து கொள்வதும் ஒன்றும் புதிதல்ல.

அந்தவகையில் நடித்த முதல் படத்திலேயே காதலில் விழுந்தவர்கள் தான் பிரியங்கா சோப்ரா மற்றும் ஹர்மனா பவேஜா. இருவரும் சில காரணங்களால் காதலிக்க ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுடனான காதல் முறிவிற்கு காரணம் இதுதான் என்று ஹர்மனா கூறியிருக்கும் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது பிரியங்கா மற்றும் ஹர்மனா ஆகியோர் தாங்கள் இணைந்து நடித்த ‘லவ் ஸ்டோரி 2050’ படத்தில் காதலிக்க தொடங்கினர். ஆனால் இணைந்து நடித்த அடுத்த படத்திலேயே பிரேக்கப் செய்துகொண்டனர்.

priyanka-chopra-cinemapettai

தற்போது ஹர்மனா பவேஜா பேட்டி ஒன்றில், பிரியங்கா தன்னிடம் ஆசை பட்டு பலமுறை கேட்ட ஒரு விஷயத்தை செய்யாமல்  இருந்ததாலும், அதில் தான் எல்லைமீறிய காரணத்தாலும் தான் அவர்களுடைய காதலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது எனக் கூறியிருக்கிறார்.

மேலும் பிரியங்கா, பவேஜாவிடம் கேட்ட ஒரே விஷயம் நேரத்தை செலவிடுவது மட்டும்தானாம். ஆனால் ஹர்மன் தனது கேரியரில் அதிக கவனம் செலுத்தியதால் பிரியங்காவுடன் நேரத்தை செலவிட முடியாமல் போய்விட்டதாம். இதனால்தான்  இருவருக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டு விட்டது என்று சொல்லப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.