கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கும் ஊழியர்கள் சிலருக்கும் பிசீஆர் பரிசோதனை.

வேலணை பிரதேச வீதி அமைப்பு பணியில் ஈடுபட்ட மாகா கம்பனி உத்தியோகத்தர் இனங் காணப்பட்டதை அடுத்து அங்கு பணியாற்றிய ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரதேசத்துக்கு உட்பட்ட நபர்களின் 25 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கும் ஊழியர்கள் சிலருக்கும் PCR பரிசோதனை இன்று மேற்கோள்ளப்பட்டது .

வேலணை ஊர்காவற்றுறை எல்லைப்பகுதியான புளியங்கூடல் சந்தி கடைப் பிரேதசம் தொற்று நீக்கம் செய்யப்பட்டது. நெருங்கிய தொடர்பு பேணியோர் தொடர்பாக தகவல் இருப்பின் 021 222 6666 எனும் இலக்கத்திற்கு தகவல் தருமாறு கோரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.