வளிமண்டளவியல் திணைக்களம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன் துறை வரையான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இக்கடற்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுப்படுவது ஆபத்தானதென வளிமண்டளவியல் திணைக்களம் அவிவுறுத்தியுள்ளது.

காங்கேசன் துறை முதல் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையும், புத்தளத்தில் இருந்து கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை ஊடான கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் இதனால் மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை மவாட்டங்களிலும் 75 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும். இதன் போது பலத்த காற்றும் வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்தி

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.