கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் பிசிஆர் பரிசோதனை.

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவியான சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “பிரதமரும் அவரது மனைவியும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர் என அறிய முடிகின்றது. ஆனால் பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களது மகனான அமைச்சர் நாமல் ராஜபக்சவும் தன்னை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

இதேவேளை பிரதமரும் அவரது குடும்பத்தினரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாட்டில் அதிகரித்துள்ளமையினால் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதனை குறைத்துக்கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.