மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை துப்பாக்கி பிரயோகம்.

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக விசேட அதிரடி படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதை அடுத்தே, இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

Leave A Reply

Your email address will not be published.