மஹர சிறைக் கைதிகள் படுகொலை பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்.

மஹர சிறைக் கைதிகள் படுகொலை பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்
சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை 

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

மஹர சிறைக் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும், சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, சிறைக் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தாம் இந்தப் படுகொலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.