யாழ் நகரில் கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு முன்னெடுப்பு.

யாழ் நகரில் கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரும் டான் தொலைக்காட்சியும்இணைந்து யாழ் நகரில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ள கடைகளுக்கு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட கிளையினரும் டான் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து யாழ் மாவட்டம் பூராகவும் சமூக மட்டத்தில் பல்வேறுபட்ட விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில்
நேற்று முன்தினம் காரைநகரில் தொற்றுக்குள்ளானவர் நடமாட்டத்தால் கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக யாழ்நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கடைகளுக்கு இன்றைய தினம் கிருமித் தொற்று நீக்கி மருந்து விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், டான் தொலைக்காட்சியின் மனிதவள முகாமையாளர் மற்றும் டான் ரீவி பணியாளர்கள், கலந்து கொண்டு சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.