கொழும்பில் 10 ஆயிரம் பேருக்குக் கொரோனா

கொழும்பில் 10 ஆயிரம் பேருக்குக் கொரோனா

மேல் மாகாணத்தில் கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 140 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 6 ஆயிரத்து 502 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் ஆயிரத்து 73 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று 878 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கொழும்பு மாவட்டத்தில் 402 பேரும், கம்பஹா களுத்துறை மாவட்டத்தில் 188 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 106 பேரும் உள்ளடங்குகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.