இலங்கையில் கொரோனா மரணம் 129 ஆக அதிகரிப்பு.

இலங்கையில் கொரோனா மரணம் 129 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், நான்கு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கொலன்னாவைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், நான்கு ஆண்களும் கொழும்பு 02, கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவையைச் சேர்ந்த பெண் 56 வயதுடையவர் எனவும், கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த ஆண் 89 வயதுடையவர் எனவும், கொழும்பு – 10 பகுதியைச் சேர்ந்த இரு ஆண்களில் ஒருவர் 85 வயதுடையவர் எனவும், மற்றையவர் 71 வயதுடையவர், கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த ஆண் 78 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.