வேலையில்லாப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு உறுதி!

வேலையில்லாப் பிரச்சினைக்கு
விரைவில் நிரந்தர தீர்வு உறுதி!
நாடாளுமன்றில் அமைச்சர் நாமல் திட்டவட்டம்

“இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை அரசு வகுத்துள்ளது.”

இவ்வாறு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் 4.4 மில்லியன் பேர் வரையிலானோர் வேலையில்லாப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். அவர்களில் 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் இளைஞர், யுவதிகளாவர்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களைப் போன்று தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்காது நிரந்தர வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கே அரசு நடவடிக்கை எடுக்கும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.