யாழ் ஸ்டான்லி வீதியூடான போக்குவரத்து தடை.

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியூடான போக்குவரத்து தடை

நேற்று இரவு முதல் இன்று விடியும் வரை பொய்த இடைவிடாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் மூழ்கியுள்ளன.

புரேவி புயல் கடந்து சென்ற நிலையில் ஓயாத மழை நேற்று இரவு முதல் விடிய விடிய யாழ் குடா நாட்டின் பல பகுதிகளிலும் இடைவிடாது பெய்துள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

அத்துடன் யாழ். நகரின் கரையோர கிராமங்கள் பலவும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்காவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இயல்புவாழ்க்கையும் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.