யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 57,513 பேர் பாதிப்பு! 2,535 வீடுகள் சேதம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 57,513 பேர் பாதிப்பு! – 2,535 வீடுகள் சேதம்.

வடக்கு மாகாணத்தைத் தாக்கிய புரேவி புயல் மற்றும் அதன்பின்னர் பெய்த அடைமழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 57 ஆயிரத்து 513 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று மாவட்ட செயலகத் தகவல்கள்  தெரிவித்தன.

அத்துடன் 2 ஆயிரத்து  535 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும், அவற்றில் 62 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் யாழ். மாவட்ட செயலகத்தால் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்கு இன்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதேவேளை, பாதிக்கப்பட்டவர்களில் 1,072  குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 687 பேர் 33 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.