உழவு இயந்திரங்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலைத்திட்டம்

உழவு இயந்திரங்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உழவு இயந்திரங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் முகமாக ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் விழிப்புணர்வு வேலைத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அவலோன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் இவ் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட உழவு இயந்திரங்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வானது மோட்டார் வாகன பரிசோதகர் எஸ்.அகலங்க இந்திரசேன அவர்களின் தலைமையில் இன்று (07) காலை இடம்பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் விளையாட்டு மைதானத்தில்(மாவட்ட செயலகத்தின் முன்புறம்) இடம்பெற்ற இவ் வேலைத்திட்டத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள், அவலோன் நிறுவன உத்தியோகத்தர்கள், உழவு இயந்திர சாரதிகள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.