தனக்கு கிடைத்த தொடர் நாயகன் விருதை நடராஜனிடம் கொடுத்த ஹர்திக் பாண்டியா.

தனக்கு கிடைத்த தொடர் நாயகன் விருதை நடராஜனிடம் கொடுத்த ஹர்திக் பாண்டியாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்த தொடரின் தொடர் நாயகனாக நடராஜனே தேர்வு செய்யப்பட வேண்டும் என பெரும்பாலான ரசிகர்கள் விரும்பிய நிலையில், ஹர்திக் பாண்டியா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டது பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்தநிலையில், டி.20 தொடருக்கான கோப்பையை பெற்று கொண்ட இந்திய கேப்டன் கோலி அதை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்க, ஹர்திக் பாண்டியாவோ தனது கையில் வைத்திருந்த தொடர் நாயகனுக்கான விருதை நடராஜனிடம் கொடுத்து அவரை பெருமைப்படுத்தியுள்ளார். ஹர்திக் பாண்டியாவின் இந்த பெருந்தன்மையான செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.