சித்ரா மரணம் தற்கொலை என பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

நடிகை சித்ரா தூக்கல் தொங்கி தற்கொலை மரணமே. பிரேத பரிசோதனையில் உறுதி

சின்னத்திரை நடிகை  சித்ரா மரணம் தற்கொலை என பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 வைத்தியர்கள் ஒன்றரை மணி நேரமாக நடத்திய பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

நடிகை சித்ரா நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று அதிகாலை  தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஹோட்டல் அறையில் சித்ரா உடன் திருமணம் நிச்சயப்பட்ட ஹேமந்த் உடன் தங்கியிருந்தார்.

பிரேத பரிசோதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

சித்ராவின் உடலை 2 மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதியாகி உள்ளது. அவரது கன்னத்தில் இருந்த நகக்கீரல் சித்ராவின் நகக்கீறல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், என்ன காரணம் என்பது குறித்து பொலிஸார் விசாரனை நடத்தி வருகின்றனர். அவருடன் ஹோட்டல் அறையில் இருந்த ஹேமந்த், சித்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.