இலங்கைக்கு வர முடியாமால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 523 பேர் நாடு திரும்பினர்.

வௌிநாடுகளில் சிக்கியிருந்த 523 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா தொற்று காரணமாக நாட்டிற்கு வர முடியாமால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 523 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 300 பேர், கட்டாரில் இருந்து 127 பேர் மற்றும் இந்தியாவில் இருந்து 96 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்தவர்கள் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.