136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலக்கு அனுப்பிவைப்பு.

136 பேரின் PCR மாதிரிகள் அனுராபுரம் அனுப்பிவைப்பு.

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் PCR பரிசோதனை அறிக்கை நாளையே வெளிவரும் எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள், தொடர்புடையவர்கள் என 394 பேரின் மாதிரிகள் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் தலைமையில் பெறப்பட்டன.

இன்று பெறப்பட்ட மாதிரிகளில் 136 பேரின் மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஏனையவை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் PCR பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டதில் நேற்று அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் 06 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பலரது மாதிரிகள் மீளவும் பெறப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெறப்படவேண்டும் என்று ஆய்வுகூடத்தால் குறிப்பிடப்பட்டவர்களின் மாதிரிகள் நாளை மீளவும் பெறப்பட்டு PCR பரிசோதனைக்கு உள்படுத்தப்படும் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

 

Leave A Reply

Your email address will not be published.