தற்கொலைக்கு ‘தூண்டியதாக’ சித்ராவின் ‘கணவர்’ ஹேம்நாத் கைது

நடிகை சித்ரா கடந்த 9-ம் தேதி சென்னை நசரத்பேட்டை அருகில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை முடிவில் உறுதியானது.

சித்ரா-ஹேம்நாத் இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ஹேம்நாத் அளித்த அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் நேற்றிரவு (14) கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.