யாழில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

யாழில் மேலும் 13 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி.
மருதனார்மடம் கொத்தணி 52 ஆக அதிகரிப்பு 
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் 13 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட 114 வியாபாரிகளின் மாதிரிகளில் இன்று செவ்வாய்க்கிழமை 13 வியாபாரிகளுக்குத் தொற்று உள்ளமை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

உடுவிலைச் சேர்ந்த 6 பேரும், தெல்லிப்பழையைச் சேர்ந்த 3 பேரும், நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த தலா 2 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.

அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை இன்று காலை வெளியாகியுள்ளது. மேலும் சில மாதிரிகளின் முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகின்றது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.